கிராமம் சார்ந்து, கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குநர் பொன். ராம்.

Advertisment

அவரோடு இப்போது சசிகுமார் கைகோர்த் துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் "எம்.ஜி.ஆர். மகன்' படத்தின் படப்பிடிப்பு தேனியில் ஆரம்பமாகிவிட்டது.

sss

இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின் றனர். இந்தப் படத்தின்மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாகக் களமிறங்கிறார் மிருணாளினி ரவி.

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் பொன். ராம். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டராகவும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர்.

சரவணன் தயாரிப்பு நிர்வாகியாகவும், சித்தார்த், செந்தில்குமார் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகவும் பணிபுரியும் இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.